திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரை தாக்கி ரூ.9 லட்சம் கொள்ளை

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 9.50 லட்சம் பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடித்துச் சென்றது.

News image
Updated On :26 நவம்பர் 2018, 12:31 pm

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 9.50 லட்சம் பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடித்துச் சென்றது.

இதுதொடர்பாக மங்கலம் பகுதி பேலீஸார் தெரிவித்ததாவது, திருப்பூர் பாரதிபுரம் பகுதியில் இடுவையைச் சேர்ந்த எஸ்.கேசவன் (28) என்பவர் கனியம்பூண்டி எனுமிடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் அங்கு பணப் பரிவர்த்தனை நிலையமும் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் இரவு கடையடைத்துவிட்டு கேசவன் வீடு திரும்பும்போது, 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்து பாரதிபுரம் பகுதியை கடந்தவுடன் இரும்புக் கம்பியால் தலை மற்றும் கைப் பகுதிகளில் பலமாகத் தாக்கி அவரிடம் இருந்த ரூ. 9.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கேசவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.