சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வறண்ட கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் பரிதவித்த நிலையில் காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சரஸ்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மூதாட்டி பஜனைக் கோயில் சாலையில் தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது கணவர் உயிரிழந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அவர் தனியாக வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் வீட்டுக்கு அருகே இருந்த தரைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதை யாரும் பார்க்காததால் அவருக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அவருக்கு உணவு கொண்டு வந்த பக்கத்து வீட்டினர், அவரைக் காணாமல் தேடியபோது கிணற்றில் விழுந்து கிடந்ததை பார்த்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டனர். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், தைரியத்தோடு மனம் தளராமல் இருந்ததே அவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் என்கிறார்கள்.
இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த மூதாட்டியின் தைரியத்தை அக்கம் பக்கத்தினர் பாராட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


