தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது 

தமிழக மீனவர்கள் நால்வர் புதனன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது 
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் நால்வர் புதனன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த  நான்கு மீனவர்கள், புதனன்று இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது நாட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களில்  இலங்கை கடற்படையினரால் நடக்கும் இரண்டாவது கைது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com