கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரிய கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகி ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2019, 6:15 am

DIN


சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகி ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, தமிழகத்தில் இருந்து திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னையிலேயே, மிகப்பெரிய திருப்பதியைப் போன்ற ஏழுமலையான் கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாகவும், திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்துதான் ஏராளமான பக்தர்கள் வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆலோசனை நடத்திய பிறகு, சென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரியக் கோயிலைக் கட்டுவதற்கான பணியை திருப்பதி தேவஸ்தானம் துவக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இதுபோல கன்னியாகுமரியிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதேப்போன்று சென்னையிலும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியுடன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தை ஒதுக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சென்னையில் அதற்கான நிலத்தை ஒதுக்கி தருவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். ஆனால் அப்போது அதனை செயல்படுத்த முடியாமல் போனது. ஆனால் இப்போது சென்னையில் அவ்வளவு பெரிய நிலம் கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறினார்.

விஐபி டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் பிரிவுகளை ஒன்றாக மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மணி நேரமும் 6 முதல் 7 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துச் செல்கிறார்கள். பக்தர்களுக்குத்தான் அனைத்து விதத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.