விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் கடந்த 3 நாள்களாக பட்டாசுத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.
பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் கடந்த 100 நாள்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மூடப்பட்டப் பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வேலை இழந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மூன்றாம் நாளாக புதன்கிழமையும் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள மைதானத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இசை மதிவாணன், பட்டாசு விற்பனையாளர்கள் ரவி, ஷேக்மீரா, பாமக நிர்வாகி ஜூலி, மக்கள் பாதை அமைப்பு நிர்வாகி ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என். இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைதம்பி, பட்டாசு தயாரிப்பாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



