ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களுக்கான ரூ.12 ப்ரிமீயம் செலுத்து ரூ.2 லட்சத்துக்கான ஒரு ஆண்டு காப்பீடு வசதி முதன்முறையாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிரதமரின் சுரக்ஸா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12க்கு ஒரு லட்சம் மற்றும் ரூ.300க்கு ரூ. 2 லட்சத்துக்கான காப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியும், விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணத்தை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு வசதியுடன் மாடுபிடி வீரர்களுக்கு இதய துடிப்பு, உயரம், எடை பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர். காப்பீடு வசதி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாடு பிடி வீரர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









