கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் ஆற்றி வருகிறது.
கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் சார்பில் ஆண்டுதோறும் நாஞ்சில் நாடன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பரிசுத் தொகை ரூ.50 ஆயிரம், கேடயம், சான்றிதழ் ஆகியவை அடங்கியதாகும். கடந்த ஆண்டு (2018) ஓவியர் ஜீவாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளரும், உவேசா படைப்புகள், பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணனுக்கு கோயம்புத்தூர் அண்ணாசிலை அருகில் உள்ள ஆர்த்ராஅரங்கில் ஜன.20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் தி.சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ், ஆலோசகர்கள் சொல்வனம் வ.சீனிவாசன், ஆர்.ரவீந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்! அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் பேட்டி!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
நைட் கிளப் அடிதடி... இங்கிலாந்து அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் அதிரடி நீக்கம்!

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



