திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 1:38 am IST


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை புதன்கிழமை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் சந்திரன் (35), வீட்டின் அருகில் வசிக்கும் 16 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், தங்கவேலுவின் வீட்டில் அவரது நண்பர் நாகசாமி தங்கியிருந்தபோது, நாகசாமியும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி லைப்லைன் டிரஸ்டில் அடைக்கலமானார். இதையடுத்து, சந்திரன் மீது சிறுமி அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், முதல் குற்றவாளி சந்திரனுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதமும், 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.