மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல்

News image

திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்யும் அலுவலர்கள்.

Updated On :24 ஜனவரி 2019, 1:44 am IST


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பிரிவு போலீஸார் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் 3-ஆம் கட்டமாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோயில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 625 கோயில்களுக்கு சொந்தமான சுமார் 4,375-க்கும் மேற்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
இச்சிலைகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள சிறிய கோயில்களுக்கு உரியவை ஆகும். சம்பந்தப்பட்ட கோயில்களின் திருவிழாவின்போது, அறநிலையத் துறையின் அனுமதி பெற்று, சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, திருவிழா முடிந்த பிறகு மீண்டும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படுவது வழக்கம். 
இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து குறித்து ஏற்கெனவே 2 கட்டங்களாக 500-க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வில் சிலைகளின் நீளம் மற்றும் உயரம், உலோகத்தின் தன்மை, பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், 3-ஆம் கட்டமாக புதன்கிழமை இந்த ஆய்வு நடைபெற்றது. 
திருமக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி கோயில்களுக்குச் சொந்தமான 92 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.