சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் தில்லியில் 19ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது எனவும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகேதாட்டுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதேகருத்தை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கும் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.