தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் கோவை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவையின் சின்னக் கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் 9 செ.மீ. மழையும், அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்ப உள்ளது.

நேற்று வரை நாடு முழுவதும் பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மழை சராசரி அளவைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com