இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் போதிய ரயில் சேவை இன்றி அவதிப்படும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் மற்றும் விழுப்புரம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் செல்லும் ரயில்களிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது முன்பதிவு 3 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது.