கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கண்டதேவி ஊருணியில் அம்மன் சிலை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் ஊருணியை தூர்வாரியபோது, இரண்டரை அடி உயரமுள்ள சிலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :27 மே 2019, 12:29 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் ஊருணியை தூர்வாரியபோது, இரண்டரை அடி உயரமுள்ள சிலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஊருணி உள்ளது. புராண காலத்து ஊருணியான இதை, ஜடாயுத புனித தீர்த்த ஊருணி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊருணி தண்ணீரை கோயில் பயன்பாட்டுக்கும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். 

தற்போது, இந்த ஊருணியில் தண்ணீர் வற்றி, கோரை, பாசி, தாமரை இலைகள் மண்டி, கழிவுகள் நிரம்பி மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதையறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த பருவதமலை மகான் மெளனயோகி அருட்பேரவை என்ற தனியார் அமைப்பைச் சேர்ந்த சிவனடியார்கள் ஆண்கள், பெண்கள் என 250 பேர், கடந்த 25 -ஆம் தேதி ஊருணியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, ஊருணியின் வடக்குக் கரையில்  இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.

இது குறித்து, திருமருதூர் கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், ஆராவயல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல் சார்பு-ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் ராஜாராம், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தேவகோட்டை மண்டல துணை வட்டாட்சியர் நேரு, கண்டதேவி வருவாய் ஆய்வாளர் அனுராதா ஆகியோர், சிலையைக் கைப்பற்றி தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தினர். இந்த சிலையில்,  ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பொன்னகரம், 27.8.1996 என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது, எந்த கோயிலுக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.