மோடி - ஜின்பிங் சந்திப்பு: பொதுமக்களுக்கு இடையூறின்றி பதாகை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, அவர்களை வரவேற்று பதாகை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பதாகை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி
பதாகை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி
Published on
Updated on
1 min read


சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, அவர்களை வரவேற்று பதாகை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில், வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்ல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோடி - ஜின்பிங் நிகழ்ச்சியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி அளித்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறின்றி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலைகளில் வரவேற்பு பதாகைகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com