சென்னை: 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.
அதாவது, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?
முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தொடங்கப்பட்ட தொழில்கள் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர்?
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன? அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுகமான முதல் நாளிலேயே ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் பங்குகள் 13% உயர்வு!

கோலாகலமாகத் தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



