விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :


சென்னை: 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தொடங்கப்பட்ட தொழில்கள் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர்?

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன? அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

மேலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.