கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்தில் பொதுமுடக்க காலத்தில் விதிமீறல்: ரூ.20 கோடியை நெருங்கும் அபராதம்

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியவர்களிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை ரூ.19.35 கோடியாக உள்ளது.

News image
தமிழகத்தில் பொது முடக்கம் மீறல்: ரூ.20 கோடியை நெருங்கும் அபராதம்
Updated On :1 ஆகஸ்ட் 2020, 5:39 am

DIN

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியவர்களிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை ரூ.19.35 கோடியாக உள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 744 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 24 ஆயிரத்து 633 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 60 ஆயிரத்து 011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.19 கோடி  35 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மொத்த விவரம்
மொத்தம் 6,60,011 வாகனங்கள் பறிமுதல்
விதிமீறியதாக 9,24,633 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை
இதுவரை 8,40,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.