கொடி நாள்: ரூ. 1 லட்சம் வழங்கி நிதி வசூலைத் தொடங்கி வைத்தார் தமிழக ஆளுநர்

கொடி நாளையொட்டி ரூ.1 லட்சம் வழங்கி நிதி வசூலை தொடங்கி வைத்தார்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Published on
Updated on
1 min read

கொடி நாளையொட்டி ரூ.1 லட்சம் வழங்கி நிதி வசூலை தொடங்கி வைத்தார்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

முப்படை வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் விதமாக டிசம்பர் 7 அன்று கொடி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த கொடி நாளையொட்டி, மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டு அது முப்படை வீரர்களின் மறுவாழ்வுப் பணிக்கு பயன்படுத்தப்படும். 

அந்த வகையில், கொடி நாளையொட்டி பாதுகாப்புப்படை நிதியத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கி நிதி வசூலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். 

முன்னதாக, கொடி நாளையொட்டி, தாராளமாக நிதி வழங்குமாறு மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com