மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலூர் அருகே சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து கொலை

வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2020, 5:57 am

DIN

வேலூர்: வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், அரியூர் அருகே ஊசூர் செவிலியர் கல்லூரி எதிரே காமேஷ்(26) என்பவர் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு ஒரு கும்பலால் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன்தொடர்ச்சியாக, அவரது நண்பர்களான புழல் சிறை வார்டன் தணிகைவேல்(26), திவாகர்(25) ஆகியோர் ஊசூர் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி அசோக் என்பவர் அரியூர் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த 3 பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ரௌடி அசோக் கூட்டாளிகளான ராஜா என்கிற எம்எல்ஏ ராஜா உள்பட 6 பேரை பிடித்து அரியூர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.