பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேதாரண்யம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை  கைப்பற்றிய காவலர்கள் கொவிசாரித்து வருகின்றனர்.

News image
கொலை செய்யப்பட்ட ரவி.
Updated On :24 டிசம்பர் 2020, 7:15 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை  கைப்பற்றிய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி பாரதிநகரை சேர்ந்தவர் கோவிந்தராசு மகன் ரவி(30). அதே கிராமம் சிங்கன் குத்தகை பகுதியைச் சேர்ந்த மு.ராமச்சந்திரன்(34). இருவருக்கும் இடையே புதன்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்னைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து, இரவு ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் வெட்டியதில் ரவி உயிரிழந்தார்.

ரவியை வெட்டிய ராமச்சந்திரன், எதிரே வந்த காத்தமுத்து (55) என்ற ஆட்டோ ஓட்டுநரையும் உடலின் பல இடங்களிலும் வெட்டியுள்ளார்.

காயமடைந்த காத்தமுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த வாய்மேடு காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.