கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

News image
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
Updated On :26 டிசம்பர் 2020, 7:07 am

DIN

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை,கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடியல் நடந்த அரசு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பரிசுத் தொகுப்பு வருகிற 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப் படுவதை தடுக்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி சேலம் மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்கள் 9 லட்சத்து 92 ஆயிரத்து 350 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

சனிக்கிழமை காலை முதல் சேலம் அரிசிபாளையம், பள்ளப்பட்டி மற்றும் அனைத்து  பகுதியிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

 இந்த பொங்கல்  பரிசு தொகுப்பு டோக்கனில்  கடை எண்,  கடையின் பெயர், அட்டை எண்,  அட்டைதாரரின் பெயர் பொருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் வீடுவீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்குரிய டோக்கன் வழங்கப்படும் என்றும் வருகிற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் இன்று காலை  பொதுமக்கள் திரளாக வந்து பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்க என கேட்டனர்.

ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் நாங்களே வீடு வீடாக வந்து டோக்கன் வழங்குகிறோம். பின்னர் நான்காம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்து அனுப்பி வைத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.