கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மந்திரவாதி தாக்கியதில் பெண் சாவு: கணவர் கவலைக்கிடம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - மூலனூர் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவருடைய மனைவி ஈஸ்வரி (55). இவர்களுடைய மகன் உதயகுமார் (30). இவர் பல்லடம் செஞ்சேரிமலையில் பைனான்ஸ் வைத்துள்ளார்.

News image
மந்திரவாதி தாக்கியதில் பெண் சாவு:
Updated On :30 டிசம்பர் 2020, 7:24 am

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - மூலனூர் சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவருடைய மனைவி ஈஸ்வரி (55). இவர்களுடைய மகன் உதயகுமார் (30). இவர் பல்லடம் செஞ்சேரிமலையில் பைனான்ஸ் கடை வைத்துள்ளார்.

 உதயகுமாருக்கு திருமணமாகி சில வருடங்களாக குழந்தை இல்லை. ஆறுமுகம் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஃபர்னிச்சர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் குழந்தை வேண்டியும், தொழில் சிறக்கவும் மந்திரவாதி ஒருவர் மூலம் ஆறுமுகம் பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

 புதன்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் பரிகாரம் முடிந்து, கடையில் பரிகார பூஜை நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அறவே இல்லை. அப்போது மந்திரவாதி கடையிலிருந்த ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி ஈஸ்வரி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

 கழுத்து அறுபட்டு ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறுமுகம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.