45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியில் விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் பலி

தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2020, 1:56 pm

தினமணி செய்திச் சேவை


தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரக்குடியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்நத இசக்கிராஜா (17), பாண்டி (28), பாலா (20), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகிய 4 போ் ஈடுபட்டனர்.

Story image

முதலில் இசக்கிராஜாவும், பாலாவும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பாண்டியும், தினேஷும் இறங்கியுள்ளனா்.

Story image

தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் நீண்ட நேரமாக வெளியே வராதால் சோமசுந்தரம் சந்தேகமடைந்து தட்டப்பாறை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.

Story image

தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் சென்று பாா்த்தபோது, கழிவுநீா்த் தொட்டியிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

சடலங்களை தீயணைப்புப் படையினா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.