இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து

பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 12:40 pm

DIN

பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பவானி கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு பில்லூர் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு தினசரி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Story image

இந்நிலையில் 11 மணிக்கு பவானி கதவணை மின் நிலையத்தில் உள்ள 2 மின்மாற்றியில் ஒரு மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்தது. இதைத்தொடர்ந்து இதிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின் உற்பத்தி செய்யும் அறையில் உள்ள மின் ஒயர்கள் அனைத்தும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

Story image

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து மின் உற்பத்தி நிலைய அறையிலிருந்து பயங்கரமான புகைமூட்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் தீயை அணைக்கும் பணிக்கு வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் புகைமூட்டம் அதிகம் ஏற்பட்டதால் அதே பகுதியில் ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். 

Story image

இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களை உடனடியாக அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தொடர்ந்து புகைமூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவை மற்றும் அன்னூர் பகுதிகளிலிருந்து கூடுதலாக 30 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள கரட்டுமேடு குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.