சென்னையில் 1,107 பேர்; பிற மாவட்டங்களில் 5,865 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,107 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 96,438 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 577 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 385 பேருக்கும், தூத்துக்குடியில் 380 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது. 

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com