படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், பொது முடக்கத்தை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக முதல்வர்
அதே சமயம், பொது முடக்கக் காலத்திலேயே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது, பேருந்து சேவைக்கான தடை தொடர்வது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
இதையும் படிக்கலாம்.. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்
அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன்.
நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...