திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆளுநர் கிரண் பேடியால் 4 ஆண்டுகளாக வேதனை தான்: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வேளையில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :2 ஜூன் 2020, 4:19 pm IST

புதுச்சேரியில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வேளையில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 

புதுச்சேரியில் தற்போது வெளிமாநிலங்கள் மற்றும்  அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களால் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் தற்போது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆதலால் புதுவை  மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் மீண்டும் நாளை குபேர் அங்காடி செல்வதால் மிகக் கடுமையான கட்டுப்பாட்டுடன் குபேர் அங்காடி காய்கறி மார்கெட் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. 50 பேர் திருமணத்தில் கலந்துகொள்ளலாம் அதைத் திருமண மண்டபங்களில் நடத்த அனுமதிக்கப்படும்.

மேலும், அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்தவித உத்தரவாதம் இன்றி ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது. எந்த புகாரையும் விசாரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வேளையில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிக்காமல் விதிமுறைகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் புதுவை மாநில மக்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறார். அவரால் 4 ஆண்டுகளாக சாதனை ஏதும் இல்லை, மக்களுக்கு வேதனை தான் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.