/

கரோனா: மதுரையில் ஆர்டிஓ அலுவலகம் மூடல்

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

News image
மதுரை ஆர்டிஓ அலுவலகம் மூடல்
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பிரிவில் உதவியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சேர்க்பகப்பட்டுள்ளா். அதையடுத்து திங்கள்கிழமை வாகனப்பதிவு, உரிமம் போன்றவற்றுக்காக சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பணியாளர்களும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அலுவலகம் மூடப்பட்டது. 3 நாள்களுக்கு அலுவலகம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.