/

கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்றுக்கு ஒருவர் பலி

கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிக்கப்பட்ட 50 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

News image
கள்ளக்குறிச்சியில் கரோனாவுக்கு ஒருவர் பலி
Updated On :22 ஜூன் 2020, 9:52 am

DIN

கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 50 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் 387 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 306 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதானவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனால் அந்த மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.