காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தது

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தது
Updated on
1 min read

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. 

காஞ்சிபுரம் அருகே தாமல் ,உத்திரமேரூர், மதுராந்தகம், வாலஜாபாத் , வேளியூர் கோவிந்தவாடி ஆகிய கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் ஆட்கள் கிடைக்காமல் காய்ந்தும், சரிந்தும் கிடைக்கின்றன அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

அதேபோல அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே செய்யூர் ,மதுராந்தகம் ,திருக்கழுக்குன்றம், திருப்போரூர், படப்பை, அச்சரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தற்பூசணி பலன்கள் விழைந்து அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

விவசாயிகள் சங்க செயலாளர் நேரு மாவட்ட ஆட்சியரை சந்தித்து இக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com