இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா: கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு!

கரோனா தடுப்பு பணிகளுக்காகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ.மதிவாணன் தனது

News image
Updated On :29 மார்ச் 2020, 9:17 am

DIN

கரோனா தடுப்பு பணிகளுக்காகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ.மதிவாணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம் உ.மதிவாணன் வழங்கியுள்ளார்.

இது குறித்து எம்.எல். ஏ.உ. மதிவாணன் கூறியது: கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்களுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருப்பதை கடைபிடித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் நம்மால் முடிந்தவரை நல்லதை செய்யவேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும் எனது மாத ஊதியத்தையும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.