இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா சூழலை எதிர்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2020, 3:44 pm

DIN


கரோனா சூழலை எதிர்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

அவர் தெரிவித்ததாவது:

"கரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனைகளைத் தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 15,00 படுக்கைகள் அரசு தரப்பில் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் தயாராக உள்ளன. கரோனாவை எதிர்கொள்வதற்கான உச்சபட்ச தயார் நிலையை அரசு உறுதி செய்கிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு மட்டுமே இந்த சூழலை எதிர்கொள்ள முடியும்.

பயணத் திட்டத்தை கண்டறிவதன்மூலமே சமூகப் பரவலைத் தடுக்க முடியும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மனநல மருத்துவர்கள் இருக்கின்றார்கள். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களிடம் ஆலோசனைகளைப் பெறலாம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.