இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்வதாக அச்சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2020, 7:10 am

DIN

கரோனா நோற்று தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொதுநிவாரணநிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வெள்ளிக்கிழமை தமிழக அரசு வேண்டுகோள் விடுவித்தது. இதையடுத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்வதாக அச்சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் கே.தங்கவேலவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் மக்களை பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளது. அதனால் மக்கள் தனிமைப்படுத்தி வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஒரு லட்சம் பேர் பாராட்டுகிறோம். 

அதே நேரத்தில் கரேனா நோற்று தொற்று ஒழிப்பு  நடவடிக்கைகளுக்காக எங்கள் சங்கத்தின் மாநில குழு முடிவின் படி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஒரு லட்சம் பேர் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.