கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டயில் மொத்தம் 8 பேர் கரோனா தொற்று எற்பட்டுள்ளது.
12வயது சிறுமி உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 4 பேரும் சூளகிரியில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள்.
மாவட்டத்தில் இதுவரை 4 பெண்கள், 1 சிறுமி, 3 ஆண்கள் என 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உள்ள 8 பேருக்கும் எந்தவித பாதிப்போ அறிகுறிகளோ இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூளகிரி பகுதி கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
சூளகிரியில் தொற்று ஏற்பட்டு உள்ள 6 பேரும் ஒசூரில் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...