திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நா.வெங்கடாசலம்(45). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் கல்விப்பிரியனுக்கும ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் எதிரொலியாக கல்விப்பிரியன் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு சென்றபோது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டினாராம். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரையில் குற்றவாளியை கைது செய்யப்படாததால் திருத்துறைப்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் காலையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.