மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செந்தூரில் இந்து முன்னணி ஆப்பாட்டம்

திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் கோயிலைத் திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2020, 10:34 am

DIN

திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் கோயிலைத் திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு அறிவித்த தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில்கள் திறக்கப்படாததால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே தகுந்த பாதுகாப்புடன் திருக்கோயிலை திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். 

மேலும் கோயிலை நம்பி வாழும் லட்சக்கணக்கோரின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நுழைவாயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி ஒன்றிய செயலர் ராஜேந்திரன், நகரத்தலைவர் எம்.அரிகிருஷ்ணன், நகரப் பொதுச்செயலர் மு.முத்துராஜ், நகர பொருளாளர் ஆர்.மணி, நகரத் துணைத்தலைவர் எஸ்.மாயாண்டி உள்ளிட்ட 19 பேரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமையில் தாலுகா காவல் ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.