தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா தொற்று: ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் பலி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுங்குவார்சத்திரம் அடுத்த ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை பலியானார்.

News image
Updated On :26 மே 2020, 1:45 pm

DIN


ஸ்ரீபெரும்புதூர்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுங்குவார்சத்திரம் அடுத்த ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட ஓஎம்மங்களம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜாராம்(39). சென்னை சொளகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை வரை பணியில் இருந்துளார். 

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால் ராஜாராமன் கடந்த வெள்ளிக்கிழமை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சனியன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜாராம் செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.