மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜூன் 10ஆம் தேதி வரை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2020, 2:15 pm

DIN

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் சார்பில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு , தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த சந்திப்புக்குப் பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்,  தாங்கள் மூன்றாம் தர மக்கள் போல் நடத்தப்பட்டதாகவும், தாங்கள் என்ன தாழ்த்தப்ட்டவர்களா என சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர், கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி,  திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவில், யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாங்கள் கருத்து கூறவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.