சென்னை: தமிழகத்தில் 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையனிடம், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம் எனப் பெயர் மாற்றம்! மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அவைத் தலைவர் சொன்னது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



