திருமுல்லைவாசலில் திடீர் கடலரிப்பு: மீனவ கிராம மக்கள் அச்சம்
திருமுல்லைவாசலில் திடீர் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


திருமுல்லைவாசலில் திடீர் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் உள்ள கடலில் உப்பனாறு சென்று கலக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக அதிக சீற்றத்துடன் காணப்படும் திருமுல்லைவாசல் கடல், முகத்துவாரம் வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிக கடல் சீற்றத்தால் பெருமளவில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் மீனவக் கிராமத்திற்கு புகும் நிலை ஏற்படும் அச்சத்தில் உள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மீனவர்கள் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்குகளை கொண்டு கடல் அரிப்பை தற்காலிகமாக சீரமைத்து வைத்துள்ளனர். முகத்துவாரத்தில் கருங்கற்கள் கொட்டி அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாததால் இவ்வாறு முகத்துவாரம் வழியாக தண்ணீர் புகுந்து கடல் அரிப்பு ஏற்படுவதாகவும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...