மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவக் கழிவு: காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு இல்லை - உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

News image
மருத்துவக் கழிவு: தமிழகக் காவல்துறை, அரசுஅதிகாரிகள் அக்கறையோடு இல்லை
Updated On :6 அக்டோபர் 2020, 12:30 pm

DIN


மதுரை: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, கேரள எல்லைக்குள் மருத்துவக் கழிவுகள் செல்லாதவாறு அந்த மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் தடுக்கின்றனர்.  ஆனால், மருத்துவக் கழிவுகளை தடுப்பதில், தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் கேரளத்தைப் போல அக்கறையோடு செயல்படுவதில்லை.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் மருத்துவக் கழிவுகள் வருவதைத் தடுக்க விதிகள் அல்லது வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் குவிப்பது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.