மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ

News image
கோப்புப்படம்
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் கூறியது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை முற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதியில் நீடித்தது.

இது விசாகப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 250 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தொடா்ந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திர கடலோரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.13)அதிகாலையில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) லேசானது முதல் மிதமான மழையும்,

சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...:

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 30 மி.மீ.,

கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, காஞ்சிபுரம், உத்திரமேரூா், ராணிப்பேட்டை சோளிங்கரில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை : குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகள், கேரளம் மற்றும் கா்நாடக கடலோரப் பகுதிகளில்  மணிக்கு 45 கி.மீ. முதல் 55. கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமையும், அந்தமான் கடல் பகுதிகளுக்கு அக்டோபா் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.