இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 10-ஆம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூரில் சட்டப்படிப்பை முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்துள்ளார். எனவே தமிழக அரசின் அரசாணையின்படி பூர்ணிமா பதவியில் நீடிக்க தகுதியில்லை என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிவுத்துறையிலிருந்து பெற்றப்பட்ட சான்றிதழ்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமா, கடந்த 1984-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து, அந்த சான்றிதழை காணொலியில் காட்டினர்.