இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது: பாஜக தேசிய செயலர் தகவல்

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது; தற்போதுள்ள நிலையிலேயே இருக்கும் என பாஜக தேசிய செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.

News image
புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது; தற்போதுள்ள நிலையிலேயே இருக்கும் என பாஜக தேசிய செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.
Updated On :16 அக்டோபர் 2020, 7:52 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படாது; தற்போதுள்ள நிலையிலேயே இருக்கும் என பாஜக தேசிய செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகம், குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களைப் போல, புதுச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தாமரை கண்டிப்பாக மலரும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தோல்வியடைந்த புதுச்சேரி ஆளுங்கட்சியினர், அதை மறைப்பதற்காக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறியும், எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டும் வருகின்றனர். 

புதுச்சேரி தமிழகத்துடன் இணைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஒரு முடிவும் இல்லை. தற்போதுள்ள நிலையிலேயே புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார் பாஜக தேசிய செயலர் சி.டி. ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.