ராமேசுவரத்தில் வாகனச் சோதனையின்போது காரில் கடத்திவரப்பட்ட 300 மதுப்பாட்டில்களை துறைமுக காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
ராமசுவரத்தில் துறைமுக காவலர்கள் வாகனச் சோனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, காரில் மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 300 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவலர்கள், சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.