சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் குறித்த தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 4,844 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர்.