ரஷியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 17,347 ஆக உயர்வு! மேலும் 219 பேர் பலி

ரஷியாவில் இன்று அதிகபட்சமாக ஒருநாள் கரோனா பாதிப்பு 17,347 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவில் இன்று அதிகபட்சமாக ஒருநாள் கரோனா பாதிப்பு 17,347 ஆக அதிகரித்துள்ளது.

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 17,347 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஒருநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோரில் இதுவே அதிகமாகும். முன்னதாக 17,340 என்பது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,478 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 15,31,224 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 219 பேர் உள்பட இதுவரை 26,269 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 11,46,096 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 3,58,859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com