மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணி துவக்கம்

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:38 pm IST

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பாசன பரப்பில், 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் பாசன நிலங்கள் உள்ளன. இவற்றில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், தற்போது  இரண்டாம் போக சாகுபடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

Story image

கம்பம் சின்னவாய்க்கால், குளத்து பாசனம், உத்தமுத்து பாசன பரப்புகளில் பரம்படித்தல், நெல் நாற்றங்கால் பயிரிடுதல், நடவு  நடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து வாய்க்கால் பாசன பரவு விவசாயி மா.அய்யப்பன் கூறியது,

கம்பம் பாசன நிலங்களாக வாய்க்கால் பரவு, குளத்து பரவு, உத்த முத்து ஆகிய பாசன பரப்புகளில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.