தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோயினை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

News image

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்கக் கோரிக்கை

Updated On :7 ஜனவரி 2021, 5:38 pm IST


அவிநாசி: அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோயினை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பி. முத்துசாமி தலைமை வகித்தார். இதில் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளின் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழிகள் வளர்ப்பு உள்ளிட்டவை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, கால்நடைகளுக்கு அம்மை நோய், பரவைக் காய்ச்சல் உள்ளிட்ட மர்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்துள்ளனர். 

ஆகவே விரைவாக இந்நோய்களைத் தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இசாக், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், மணி, திமுக பொறுப்பாளர்கள்தி பழனிச்சாமி, சிவப்பிரகாஷ், பொன்னுச்சாமி, மதிமுக பொறுப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.