கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் 

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.

News image

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

Updated On :7 ஜனவரி 2021, 3:18 pm IST

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி கலந்துகொண்டு பேசினார்.

பெரியகுளம் தென்கரை வன்னியர் தெருவில் இருந்து ஊர்வலமாக கோஷமிட்டுக்கொண்டே பிச்சை எடுத்தபடி சென்றனர்.

தங்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இதுபோன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெரியகுளம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.