முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20, 21-இல் குலுக்கல்

சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image

சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 5:37 pm IST

சென்னை: சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதன் காரணமாக, டிசம்பர் 14-ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.    

அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்’ என்றும் முன்னதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இந்நிலையில் சென்னை மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கு வரும் 20,21-இல் குலுக்கல் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் இருந்து ஜனவரி 20,21 -ல் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்றும், குலுக்கல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.